இவர்களுடைய பிரச்னை என்ன?
இவர்களுடைய பிரச்னை என்ன?
மதத் துவேஷக்கருத்துக்களை எழுதுவோரில் ஒரு சிலர் வெளிப்படையாகத் தான் இன்ன இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று கூறிக்கொள்வதுண்டு. (அவ்வியக்கப் பொறுப்பில் இருப்பதால் மறைக்க வழியில்லை என்பதால் கூட இருக்கலாம்). வேறு சிலர், அதை மறைத்தே எழுதுகின்றனர்-அவர்களுக்கு முற்போக்கு என்ற முகமூடி தேவையாக இருக்கிறது. ஆம். முற்போக்கு என்ற பெயரில் சொல்லப்படும் சரக்கு நன்கு விற்பனையாவதை அனைவரும் அறிந்தே உள்ளோம். இவர்களின் எழுத்தை வரிகளுக்கிடையில் படிக்கும் யாரும் இவர்களின் வண்ணத்தை புரிந்தே உள்ளனர் என்பதிருக்க, இந்த வெறுப்பின் பரப்பாளர்கள் 'அய்யோ என்னைப் பார்த்து இப்படிச் சொல்கிறீர்களே' என்று (பொய்யாக) கூக்குரலிடவும் செய்கின்றனர்.(அத்தனை எளிதாக முகமூடியை கழற்றுவதில் உடன்பாடில்லை போலும்).
ஒருசில இஸ்லாமியப் பதிவர் குர்ஆனிலிருந்து அறிவியல் உண்மைகளை நிரூபிக்க பதிவு எழுதிவருகின்றனர்: வேறு மதங்கள் மீது துவேஷம் கக்காத வரையில் அவர்களை எதிர்க்க ஒன்றுமில்லை. அவர்களின் குர்ஆனிய கருத்துக்களை (கருத்துக்களை மட்டும்) ஒரு சுமூகமான விவாத தளத்தில் எதிர்க்கவோ, ஆதரிக்கவோ செய்யலாம். சிலர் அவ்வாறே செய்து வருகின்றதும் பாராட்டத்தக்கதே. அழகிய கருத்துப்பரிமாற்றங்கள் நிச்சயம் ஆதரிக்கப்படவேண்டியவையே.
முன்பொரு முறை தமிழோவியத்தில் திரு.நல்லடியார் என்பவர் ஒரு தொடர் எழுதிவந்த போது, அதற்கு வந்த காழ்ப்புணர்வு பின்னூட்டங்களில் ஒன்று இஸ்லாமின் பரவலை எய்ட்ஸுடன் ஒப்பிட்டு வரம்பு மீறியதும் பதிலடியாக சில முஸ்லிம்களும் பின்னூட்டங்களில் வரம்பு மீறினர். இஸ்லாம் எயிட்ஸுடன் ஒப்பிட்டப்பட்டதை ஒரு குறிப்பிட்ட பதிவர் (இஸ்லாமை தாக்கி எழுதுவதால் 'அடையாள'மான நேசர்) வேறு இடங்களில் உளம்பூரித்து சொல்லி வந்தார். ஆனால் அவரை 'பீடி பற்ற வைக்காதீர்கள் அண்ணாச்சி' என்று சொன்னால் கூட அவரால் தாங்க முடிவதில்லை என்பதை சமீப வேறு சில பதிவுகளிலிருந்து நாம் அறிய முடிகிறது. அப்படி யாரும் சொல்லிவிட்டாலோ, தீவிரவாதிகளுக்குரிய 'தகுதி'யை தாராளமாக அந்த முஸ்லிமுக்கு அவர் அளித்து விடுவார். இன்னொரு பதிவில் சுருட்டு கேட்பதாக ஏளனம் வேறு, இதிலும் தெரிகிறது இவர்களின் கயமைத் தனம்.
இந்த இடத்தில் இந்தப் புனை பெயருக்குப் பின்னால் இருக்கும் கேவலமான அயோக்கியத்தனத்தையும் அலசிப் பார்ப்போம். நேசகுமார் எனும் பெயர் சாதாரணமாக இலங்கையிலும் தென் தமிழகத்திலும் கிறிஸ்தவர்கள் பயன் படுத்தும் பெயர். முதலில் தன்னை இந்தப் புனை பெயர் மூலம் ஒரு கிறிஸ்தவராகக் காட்ட முயன்றார் இந்த காவிக் கும்பலின் ஊதுகுழல். எழுத்தில் நச்சு இருந்தாலும், அதனை ஏதோ நாகரீகமாக எழுதுவது போல் பம்மாத்தும் போக்கும் காட்டிக் கொண்டிருந்தார். இருப்பினும், இச்செயல் மூலம் இஸ்லாமியர்களிடம் இருந்து கிறிஸ்தவர்கள் மீதான வெறுப்பு அவர் நினைத்தபடி வெளிப்படாமல் போகவே, இன்னொரு உத்தியைக் கையாண்டார், அது தான் ஆரோக்கியம் எனும் புனை பெயர். இந்தப் பெயரைப் பார்க்கும் எவருக்கும் இப்பெயரில் எழுதுபவர் ஒரு கிறிஸ்தவர் என நினைப்பது மிக எளிது. இதன் மூலம் தன் ஆழ்மன வக்கிரங்களை எழுத்துகளில் வெளிக்காட்டி, வெளிப்படையாகவே தரக்குறைவான ஆத்திரமூட்டக் கூடிய நாராசமான எழுத்துகள் மூலம் இஸ்லாமியர்களைத் தொடர்ந்து வெறுப்பேற்றி அவர்களின் எதிர்வினைக் கோபத்தை கிறிஸ்தவத்தைச் சாடச் செய்வது மூலம் சிறுபான்மையினமான இரு இனமும் சண்டை இட்டு அதில் குளிர்காய எண்ணினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. காவிக்கும்பல் முன்வைக்கும் வருணாசிரமக் கொள்கையினால் பாதிக்கப்படும் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் தாம் இஸ்லாத்தையோ, கிறிஸ்தவத்தையோ தேர்ந்தெடுக்கின்றனர். மேற்கண்ட புனை பெயர் மூலம், இவ்விரு இனங்களும் சண்டை மூட்டிவிட்டால் பலனடைவது யாராக இருக்கும்?
ஒரு முஸ்லிம் பதிவர், இஸ்லாமிய கணவன் மனைவியருக்கிடையே உள்ள 'படுக்கை' பற்றிய சில உரிமைப் பிரச்னைகளை தன் வலைப்பூவில் எழுதியிருந்தார். இதை மோப்பம் பிடித்த அந்த 'நேசர்', - 'பாருங்கள் இஸ்லாத்தில் பெண்ணுரிமையை' என்று பிலாக்கணம் தொடங்கி இஸ்லாத்தில் பெண்ணுரிமையே இல்லை, அது ஆணாதிக்க மதம், வன்முறை என்றெல்லாம் வழக்கமான 'பாட்டு' பாடியிருக்கிறார்.
சல்மான் என்ற ஒருவர் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல இரவும் பகலுமாக தேடித்தேடி, இஸ்லாத்தில் எங்கெல்லாம் பெண்ணுரிமை இல்லாமலிருக்கிறது, எங்கெல்லாம் வன்முறை உள்ளது என்பதை தன் மனோஇச்சையின் படி தீர்மானிக்கிறவருக்கு பதிலளிக்கத் தோன்றவில்லை என்றாலும் அங்கே வந்தாலும் சரியாகப் புரிந்துக்கொள்கிற 'நாமக்கல் சிபி' போன்றோருக்காக சில வார்த்தைகள்:
சிபி, அந்தப் பதிவரிடமே நீங்கள் கேட்டுப்பாருங்கள்: ஒரு இஸ்லாமிய ஆண் தன் மனைவியை 'தலாக்' சொல்ல நினைத்தால் அவன்/அவர் மூன்று மாதவிடாய் காலம், மூன்று வாய்ப்புகளுக்கு பொறுத்திருக்க வேண்டும். தவிர, சரியான காரணமும் சொல்லியாக வேண்டும். ஆனால், ஒரு இஸ்லாமியப் பெண் தன் கணவரை 'தலாக்' சொல்ல விரும்பினால், ஒற்றைத் தவணையிலேயே அதை செய்து விட முடியும் .மேலும் எந்த காரணமும் சொல்லத் தேவையில்லையல்லவா! - இஸ்லாத்திலும் (பெண்)மறுமணத்திற்கு அனுமதி உண்டு.இதெல்லாம் பெண்ணுரிமையில்லையா? 'அந்த'க் காமாலைக் (இதுவும் இன்னொரு பதிவில் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் தான்) கண்களுக்கு ஏன் தென்படவில்லை?. இவ்விதம் நாம் கேட்டால், உடனே நடைமுறையில் 'மார்க்க அறிவு இல்லாத' சில முஸ்லிம் பெண்கள் அனுபவிக்கும் சிரமங்களை பதிலாக வைப்பர். சித்தாந்தத்தை பேசினால், நடைமுறைக்குத் தாவுவது, நடைமுறையைச் சொன்னால், சித்தாந்தத்தைக் கீறுவது என்கிற இவர்களின் மாய்மாலங்களை இன்று நேற்றா பார்த்து வருகிறோம்.
அபூ முஹைகளும் சலாஹுத்தீன்களும் அப்துல்லாஹ்களும் கேட்ட எதிர்க்கேள்விகளுக்கே இன்னும் பதிலளிக்காமல், துவேஷத்தைப் பரப்புவதையும் நிறுத்தாமல் செய்வதற்கு கொஞ்சமாவது 'நாணம்' இருக்கவேண்டும் என்று எம்மைப்போன்றோர் எதிர்பார்த்தால் தவறுமுண்டோ?
மற்றுமொரு அனுபவமாக, இஸ்லாம் பற்றிய விளக்கங்களை காதில் வாங்கிக்கொள்ள்( விரும்பா)மல் குற்றம் சுமத்திக் களிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளவர்களில் பெரும்பாலோர் பிராமணர்களாகவே இருப்பது ஏன்? - என்ன காரணம்? - ஒரு ரவியையோ, ஸ்ரீனிவாசனையோ வைத்து இதை நாம் சொல்லவில்லை என்றாலும் கூட! (சில 'நேசர்'கள் விதி விலக்குத் தான்). கவனிக்கவும் பெரும்பாலோர் என்று தான் குறிப்பிட்டுள்ளேன், அனைவரையும் இல்லை.
அந்தப்பதிவின் ஜால்ராப் பின்னூட்டங்களில் பல எதிர்பார்த்தப்படியே அமைந்துள்ளதும், அப்பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கிறேன் பேர்வழி என்று வந்த 'நேசர்' இதற்கெல்லாம் 'இஸ்லாமிய மூலமே' காரணம் என்ற 'விவேகமான' கண்டுபிடிப்புகளை திரும்பத் திரும்ப ஊதுவதையும் காண முடிகிறது. (வாசகர்களே, குர்ஆனையும் நபிவழியையும் முடிந்தவரைப் பின்பற்றுகிற ஏராள பக்திமயமான முஸ்லிம்களை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர்களில் எத்தனைப் பேர் 'வன்முறையை'த் தூண்டுகிறார்கள் என்பதை நெஞ்சில் கை வைத்து உங்களுக்கு நீங்களே கேட்டுப்பாருங்கள்).
ஒரு அழகிய சுமூகமான விவாதத்தில் ஈடுபட முஸ்லிம்கள் எப்போதும் எங்கேயும் தயாராகவே உள்ளனர்.
'நேசத்தை' பெயரளவில் கொண்டுள்ளவர்கள் என்றால் முதலில் சலாஹுத்தீன்களும், அபூ முஹைகளும், அப்துல்லாஹ்களும் கேட்ட ஏராள எதிர்கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வரட்டும்.
காலம் காலமாக அடிமைச்சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தவன் மனநிலைப் பாதிப்பால் 'தங்கச்சங்கிலி' அணிந்து வருகிற அழகு நங்கையரைப் பார்த்து 'அய்யோ சங்கிலி, அய்யோ சங்கிலி" என்று அலறுவானல்லவா, அதையே ஒத்திருக்கிறது - இவர்களின் இஸ்லாம் மீதான அலறல்கள்.
ஒரு முஸ்லிமுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன் தாய் தந்தையரை விட அதிக நேசத்துக்குரியவர்கள். அப்படியே ஒவ்வொரு மதத்தாருக்கும் இனத்தாருக்கும் யாரேனும் நேசத்துக்குரியவர்களாக இருக்கலாம். மறுப்பதற்கில்லை. எனவே, நாம் தமிழ் வலைப்பூ திரட்டி மேலாளர்களை கேட்டுக்கொள்வதெல்லாம், தாய் தந்தையர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் சம்பந்தப்படுத்தி மோசமாக எழுதுபவர்களின் பட்டியலில் இந்த மத துவேஷ காழ்ப்புணர்வாளர்களையும் வைக்க வேண்டும் என்பதைத் தான்.
மற்றபடி, எந்த மதம் பெண்ணுரிமை எந்தளவு அளித்திருக்கிறது? எந்த மதம் மனிதர்களை சமமாக நடத்துகிறது என்பது போல ஆக்கப்பூர்வமான விவாதங்கள் எனில் முஸ்லிம்கள் தயாராகவே இருக்கிறார்கள் எப்போதும்!
மதத் துவேஷக்கருத்துக்களை எழுதுவோரில் ஒரு சிலர் வெளிப்படையாகத் தான் இன்ன இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று கூறிக்கொள்வதுண்டு. (அவ்வியக்கப் பொறுப்பில் இருப்பதால் மறைக்க வழியில்லை என்பதால் கூட இருக்கலாம்). வேறு சிலர், அதை மறைத்தே எழுதுகின்றனர்-அவர்களுக்கு முற்போக்கு என்ற முகமூடி தேவையாக இருக்கிறது. ஆம். முற்போக்கு என்ற பெயரில் சொல்லப்படும் சரக்கு நன்கு விற்பனையாவதை அனைவரும் அறிந்தே உள்ளோம். இவர்களின் எழுத்தை வரிகளுக்கிடையில் படிக்கும் யாரும் இவர்களின் வண்ணத்தை புரிந்தே உள்ளனர் என்பதிருக்க, இந்த வெறுப்பின் பரப்பாளர்கள் 'அய்யோ என்னைப் பார்த்து இப்படிச் சொல்கிறீர்களே' என்று (பொய்யாக) கூக்குரலிடவும் செய்கின்றனர்.(அத்தனை எளிதாக முகமூடியை கழற்றுவதில் உடன்பாடில்லை போலும்).
ஒருசில இஸ்லாமியப் பதிவர் குர்ஆனிலிருந்து அறிவியல் உண்மைகளை நிரூபிக்க பதிவு எழுதிவருகின்றனர்: வேறு மதங்கள் மீது துவேஷம் கக்காத வரையில் அவர்களை எதிர்க்க ஒன்றுமில்லை. அவர்களின் குர்ஆனிய கருத்துக்களை (கருத்துக்களை மட்டும்) ஒரு சுமூகமான விவாத தளத்தில் எதிர்க்கவோ, ஆதரிக்கவோ செய்யலாம். சிலர் அவ்வாறே செய்து வருகின்றதும் பாராட்டத்தக்கதே. அழகிய கருத்துப்பரிமாற்றங்கள் நிச்சயம் ஆதரிக்கப்படவேண்டியவையே.
முன்பொரு முறை தமிழோவியத்தில் திரு.நல்லடியார் என்பவர் ஒரு தொடர் எழுதிவந்த போது, அதற்கு வந்த காழ்ப்புணர்வு பின்னூட்டங்களில் ஒன்று இஸ்லாமின் பரவலை எய்ட்ஸுடன் ஒப்பிட்டு வரம்பு மீறியதும் பதிலடியாக சில முஸ்லிம்களும் பின்னூட்டங்களில் வரம்பு மீறினர். இஸ்லாம் எயிட்ஸுடன் ஒப்பிட்டப்பட்டதை ஒரு குறிப்பிட்ட பதிவர் (இஸ்லாமை தாக்கி எழுதுவதால் 'அடையாள'மான நேசர்) வேறு இடங்களில் உளம்பூரித்து சொல்லி வந்தார். ஆனால் அவரை 'பீடி பற்ற வைக்காதீர்கள் அண்ணாச்சி' என்று சொன்னால் கூட அவரால் தாங்க முடிவதில்லை என்பதை சமீப வேறு சில பதிவுகளிலிருந்து நாம் அறிய முடிகிறது. அப்படி யாரும் சொல்லிவிட்டாலோ, தீவிரவாதிகளுக்குரிய 'தகுதி'யை தாராளமாக அந்த முஸ்லிமுக்கு அவர் அளித்து விடுவார். இன்னொரு பதிவில் சுருட்டு கேட்பதாக ஏளனம் வேறு, இதிலும் தெரிகிறது இவர்களின் கயமைத் தனம்.
இந்த இடத்தில் இந்தப் புனை பெயருக்குப் பின்னால் இருக்கும் கேவலமான அயோக்கியத்தனத்தையும் அலசிப் பார்ப்போம். நேசகுமார் எனும் பெயர் சாதாரணமாக இலங்கையிலும் தென் தமிழகத்திலும் கிறிஸ்தவர்கள் பயன் படுத்தும் பெயர். முதலில் தன்னை இந்தப் புனை பெயர் மூலம் ஒரு கிறிஸ்தவராகக் காட்ட முயன்றார் இந்த காவிக் கும்பலின் ஊதுகுழல். எழுத்தில் நச்சு இருந்தாலும், அதனை ஏதோ நாகரீகமாக எழுதுவது போல் பம்மாத்தும் போக்கும் காட்டிக் கொண்டிருந்தார். இருப்பினும், இச்செயல் மூலம் இஸ்லாமியர்களிடம் இருந்து கிறிஸ்தவர்கள் மீதான வெறுப்பு அவர் நினைத்தபடி வெளிப்படாமல் போகவே, இன்னொரு உத்தியைக் கையாண்டார், அது தான் ஆரோக்கியம் எனும் புனை பெயர். இந்தப் பெயரைப் பார்க்கும் எவருக்கும் இப்பெயரில் எழுதுபவர் ஒரு கிறிஸ்தவர் என நினைப்பது மிக எளிது. இதன் மூலம் தன் ஆழ்மன வக்கிரங்களை எழுத்துகளில் வெளிக்காட்டி, வெளிப்படையாகவே தரக்குறைவான ஆத்திரமூட்டக் கூடிய நாராசமான எழுத்துகள் மூலம் இஸ்லாமியர்களைத் தொடர்ந்து வெறுப்பேற்றி அவர்களின் எதிர்வினைக் கோபத்தை கிறிஸ்தவத்தைச் சாடச் செய்வது மூலம் சிறுபான்மையினமான இரு இனமும் சண்டை இட்டு அதில் குளிர்காய எண்ணினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. காவிக்கும்பல் முன்வைக்கும் வருணாசிரமக் கொள்கையினால் பாதிக்கப்படும் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் தாம் இஸ்லாத்தையோ, கிறிஸ்தவத்தையோ தேர்ந்தெடுக்கின்றனர். மேற்கண்ட புனை பெயர் மூலம், இவ்விரு இனங்களும் சண்டை மூட்டிவிட்டால் பலனடைவது யாராக இருக்கும்?
ஒரு முஸ்லிம் பதிவர், இஸ்லாமிய கணவன் மனைவியருக்கிடையே உள்ள 'படுக்கை' பற்றிய சில உரிமைப் பிரச்னைகளை தன் வலைப்பூவில் எழுதியிருந்தார். இதை மோப்பம் பிடித்த அந்த 'நேசர்', - 'பாருங்கள் இஸ்லாத்தில் பெண்ணுரிமையை' என்று பிலாக்கணம் தொடங்கி இஸ்லாத்தில் பெண்ணுரிமையே இல்லை, அது ஆணாதிக்க மதம், வன்முறை என்றெல்லாம் வழக்கமான 'பாட்டு' பாடியிருக்கிறார்.
சல்மான் என்ற ஒருவர் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல இரவும் பகலுமாக தேடித்தேடி, இஸ்லாத்தில் எங்கெல்லாம் பெண்ணுரிமை இல்லாமலிருக்கிறது, எங்கெல்லாம் வன்முறை உள்ளது என்பதை தன் மனோஇச்சையின் படி தீர்மானிக்கிறவருக்கு பதிலளிக்கத் தோன்றவில்லை என்றாலும் அங்கே வந்தாலும் சரியாகப் புரிந்துக்கொள்கிற 'நாமக்கல் சிபி' போன்றோருக்காக சில வார்த்தைகள்:
சிபி, அந்தப் பதிவரிடமே நீங்கள் கேட்டுப்பாருங்கள்: ஒரு இஸ்லாமிய ஆண் தன் மனைவியை 'தலாக்' சொல்ல நினைத்தால் அவன்/அவர் மூன்று மாதவிடாய் காலம், மூன்று வாய்ப்புகளுக்கு பொறுத்திருக்க வேண்டும். தவிர, சரியான காரணமும் சொல்லியாக வேண்டும். ஆனால், ஒரு இஸ்லாமியப் பெண் தன் கணவரை 'தலாக்' சொல்ல விரும்பினால், ஒற்றைத் தவணையிலேயே அதை செய்து விட முடியும் .மேலும் எந்த காரணமும் சொல்லத் தேவையில்லையல்லவா! - இஸ்லாத்திலும் (பெண்)மறுமணத்திற்கு அனுமதி உண்டு.இதெல்லாம் பெண்ணுரிமையில்லையா? 'அந்த'க் காமாலைக் (இதுவும் இன்னொரு பதிவில் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் தான்) கண்களுக்கு ஏன் தென்படவில்லை?. இவ்விதம் நாம் கேட்டால், உடனே நடைமுறையில் 'மார்க்க அறிவு இல்லாத' சில முஸ்லிம் பெண்கள் அனுபவிக்கும் சிரமங்களை பதிலாக வைப்பர். சித்தாந்தத்தை பேசினால், நடைமுறைக்குத் தாவுவது, நடைமுறையைச் சொன்னால், சித்தாந்தத்தைக் கீறுவது என்கிற இவர்களின் மாய்மாலங்களை இன்று நேற்றா பார்த்து வருகிறோம்.
அபூ முஹைகளும் சலாஹுத்தீன்களும் அப்துல்லாஹ்களும் கேட்ட எதிர்க்கேள்விகளுக்கே இன்னும் பதிலளிக்காமல், துவேஷத்தைப் பரப்புவதையும் நிறுத்தாமல் செய்வதற்கு கொஞ்சமாவது 'நாணம்' இருக்கவேண்டும் என்று எம்மைப்போன்றோர் எதிர்பார்த்தால் தவறுமுண்டோ?
மற்றுமொரு அனுபவமாக, இஸ்லாம் பற்றிய விளக்கங்களை காதில் வாங்கிக்கொள்ள்( விரும்பா)மல் குற்றம் சுமத்திக் களிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளவர்களில் பெரும்பாலோர் பிராமணர்களாகவே இருப்பது ஏன்? - என்ன காரணம்? - ஒரு ரவியையோ, ஸ்ரீனிவாசனையோ வைத்து இதை நாம் சொல்லவில்லை என்றாலும் கூட! (சில 'நேசர்'கள் விதி விலக்குத் தான்). கவனிக்கவும் பெரும்பாலோர் என்று தான் குறிப்பிட்டுள்ளேன், அனைவரையும் இல்லை.
அந்தப்பதிவின் ஜால்ராப் பின்னூட்டங்களில் பல எதிர்பார்த்தப்படியே அமைந்துள்ளதும், அப்பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கிறேன் பேர்வழி என்று வந்த 'நேசர்' இதற்கெல்லாம் 'இஸ்லாமிய மூலமே' காரணம் என்ற 'விவேகமான' கண்டுபிடிப்புகளை திரும்பத் திரும்ப ஊதுவதையும் காண முடிகிறது. (வாசகர்களே, குர்ஆனையும் நபிவழியையும் முடிந்தவரைப் பின்பற்றுகிற ஏராள பக்திமயமான முஸ்லிம்களை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர்களில் எத்தனைப் பேர் 'வன்முறையை'த் தூண்டுகிறார்கள் என்பதை நெஞ்சில் கை வைத்து உங்களுக்கு நீங்களே கேட்டுப்பாருங்கள்).
ஒரு அழகிய சுமூகமான விவாதத்தில் ஈடுபட முஸ்லிம்கள் எப்போதும் எங்கேயும் தயாராகவே உள்ளனர்.
'நேசத்தை' பெயரளவில் கொண்டுள்ளவர்கள் என்றால் முதலில் சலாஹுத்தீன்களும், அபூ முஹைகளும், அப்துல்லாஹ்களும் கேட்ட ஏராள எதிர்கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வரட்டும்.
காலம் காலமாக அடிமைச்சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தவன் மனநிலைப் பாதிப்பால் 'தங்கச்சங்கிலி' அணிந்து வருகிற அழகு நங்கையரைப் பார்த்து 'அய்யோ சங்கிலி, அய்யோ சங்கிலி" என்று அலறுவானல்லவா, அதையே ஒத்திருக்கிறது - இவர்களின் இஸ்லாம் மீதான அலறல்கள்.
ஒரு முஸ்லிமுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன் தாய் தந்தையரை விட அதிக நேசத்துக்குரியவர்கள். அப்படியே ஒவ்வொரு மதத்தாருக்கும் இனத்தாருக்கும் யாரேனும் நேசத்துக்குரியவர்களாக இருக்கலாம். மறுப்பதற்கில்லை. எனவே, நாம் தமிழ் வலைப்பூ திரட்டி மேலாளர்களை கேட்டுக்கொள்வதெல்லாம், தாய் தந்தையர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் சம்பந்தப்படுத்தி மோசமாக எழுதுபவர்களின் பட்டியலில் இந்த மத துவேஷ காழ்ப்புணர்வாளர்களையும் வைக்க வேண்டும் என்பதைத் தான்.
மற்றபடி, எந்த மதம் பெண்ணுரிமை எந்தளவு அளித்திருக்கிறது? எந்த மதம் மனிதர்களை சமமாக நடத்துகிறது என்பது போல ஆக்கப்பூர்வமான விவாதங்கள் எனில் முஸ்லிம்கள் தயாராகவே இருக்கிறார்கள் எப்போதும்!

